ஐ.பி.எல் கிரிக்கெட்: 5 அடுக்கு பாதுகாப்பு!

பெரம்பூர் : திருவிக நகர்  காவல் நிலையம் பெரவள்ளூர் காவல் நிலையத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்தது. இன்று முதல் பெரம்பூர் அப்பாராவ் பூங்க திரு.வி.க. நகர் காவல்  நிலையம் செயல்படுகிறது. இதை சென்னை மாநகர காவல்துறை ஆய்வாலர்  ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
 
ஐ.பி.ல் கிரிக்கெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
 
கிரிக்கெட் வீரர்கள் தங்கிமிடம், வந்து போகும் இடங்கள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்படும். சென்னையில் 1500 காவலர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
 
இவ்வாறு மாநகர காவல்துறை ஆய்வாலர் ராஜேந்திரன் கூறினார்.