
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
புதுடெல்லி, டிச.1 ராஜஸ்தான் மாநில ஆளுநர் எஸ்.கே. சிங் டெல்லி மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 77.
இந்திய வெளியுறவுத் துறையில் நீண்ட காலம் சிறப்பாகப் பணியாற்றியவர் அவர், பாகிஸ்தான் தூதராக 1985 முதல் 1989 வரை பதவியில் இருந்ததன் மூலம் அந்நாட்டில் நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றார். 1989இல் வெளியுறவுத்துறை செயலர் ஆனார்.
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அருணாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவரானதால் ராஜஸ்தான் ஆளுநராக நியமனம் பெற்றார்.
அவருடைய இளைய மகன் கனிஷ்கா சிங், ராகுல் காந்தியின் நெருங்கிய அரசியல் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
--Makkal Murasu--