தமிழகத்தின் மிகச்சிறந்த நீரியல் நிபுணர், பழ. நெடுமாறன் அவர்களின் தம்பி கோமதி நாயகம் காலமானார்

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் உடன் பிறந்த தம்பியும் தமிழகத்தின் மிகச்சிறந்த நீரியல் அறிஞரும் முன்னாள் தலைமைப் பொறியாளருமான பழ. கோமதிநாயகம் இன்று காலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
 

சென்னை மாம்பாக்கம் சாலையில் உள்ள பார்சன் அபார்ட்மெண்ட்டில் உள்ள வீட்டில் அவரது இறுதி நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணிக்கு நடைபெறும்.