
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கல்வியாளர் பேரா. டாக்டர் சபாபதி அவர்கள் தமிழ் சாரல் மீடியா நெட்ஒர்க்கிற்க்கு அளித்த சிறப்பு நேர்காணல்.
கோலாலம்பூர்: மலேசியாவின் தென்பகுதியில் சிங்கப்பூருக்கு அருகில் உள்ள ஜொஹூர் மாகாணத்தில் புடவைக் கடை ஒன்றில் புதன் கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள்.
ஜோஹர் மாகாணத்தில் உள்ள புடவைக் கடை ஒன்றில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ பிடித்ததில் 4 இந்தியர்கள் கருகி உயிரிழந்ததாக அந்த மாகாண தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் சுகோர் சானி ஹாஷிம் தெரிவித்தார். இந்த விபத்தில் பலியானவர்களின் பெயர் மற்றும் மற்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. இந்த விபத்தால் அருகில் இருந்த மற்ற 3 கடைகளும் சேதம் அடைந்ததாக அவர் கூறினார். இந்த விபத்து குறித்து விரிவான விவரங்கள் எதுவும் இது வரை தெரியவில்லை.