தமிழகத்தின் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரி யார்? அரசியல் கட்சிகள் ஆர்வம்!

சென்னை : தமிழகத்தின் தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவின் பதவிக்காலம் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பை ஏற்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், தமிழகத்தின் அடுத்த த‌லைமை தேர்தல் அதிகாரியை நியமிப்பதில் குழப்பம் நீடித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் பணிச்சுவை கூடுதலாக இருக்கம் என்பதால் மூத்த அதிகாரிகளும் பொறுப்பேற்க தயங்குகின்றனர்.

தமிழகத்தின் அடுத்த தலைமை தேர்தல் அதிகாரி யார் என்பதை அறிய அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.